யுனெஸ்கோ
1945ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பு (யுனெஸ்கோ) ஐக்கிய நாடுகள் அமைப்பின் (UN) விசேட முகவர் நிலையமாக இருக்கின்றது. இதன் தலைமை நிலையம் பாரிஸ் நகரில் இருக்கிறது. பன்னாட்டு அமைப்பு என்ற வகையில் இதில் உலகம் முழுவதிலுமுள்ள 193 அங்கத்துவ நாடுகளும் பதினொரு (11) இணை உறுப்பு நாடுகளும் அங்கம் வகிக்கின்றன.
வரலாறு
இரண்டு உலக மகா யுத்தங்கள் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கு அரசியல் மற்றும் பொருளாதார ஒப்பந்தங்கள் போதாது என்பதை செயல்முறையில் கண்டுள்ளன. மிகச் சரியாக சொல்வதாக இருந்தால் "யுத்தம் என்பது மனிதர்களின் மனங்களிலிருந்து தோன்றுவதால், சமாதானத்தின் பாதுகாப்பு மனிதர்களின் மனங்களிலேயே உருவாக்கப்பட வேண்டும்". (யுனெஸ்கோ சுருக்கம்) யுனெஸ்கோவின் பிரதான நோக்கம் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல், வறுமையை ஒழித்தல், நிலைபேறான அபிவிருத்தி மற்றும் கல்வி, இயற்கை விஞ்ஞானம், சமூகவியல், கலாசாரம், தொடர்பாடல் மற்றும் தகவல் என்பவற்றின் ஊடாக கலாசாரங்களுக்கிடையிலான உரையாடல் என்பவையாகும்.
யுனெஸ்கோ செயலகத்திற்குத் தலைமை தாங்குகின்ற பணிப்பாளர் நாயகம் ஒட்றி அசௌலே அவர்கள் யுனெஸ்கோவின் பொது மகாநாடு மற்றும் நிறைவேற்று சபை என்பவற்றினால் மேற்கொள்ளப்படுகின்ற தீர்மானங்களை அமுல்படுத்துகிறார். கிடைக்கக்கூடியதாக இருக்கின்ற வரவுசெலவு திட்டத்தை அமைத்துக்கொள்ளுவதோடு சேர்த்து யுனெஸ்கோவின் இலக்குகளையும் முன்னுரிமைகளையும் ஸ்தாபிப்பதற்கு ஒவ்வொரு இரண்டு வருடமும் பொது மகாநாடு நடைபெறுகிறது. இரண்டாவது நிறுவனம் நிறைவேற்று சபையாகும். இது அமுலாக்கும் நிகழ்ச்சித்திட்டத்திற்கு தொடர் செயலாக வருடத்திற்கு இரண்டுமுறை கூடுகிறது.
யுனெஸ்கோவுக்கான இலங்கை தேசிய ஆணைக்குழு (SLNCU)
யுனெஸ்கோவுக்கான இலங்கை தேசிய ஆணைக்குழு யுனெஸ்கோவின் நிகழ்ச்சி நிரலை இலங்கையில் அமுல்படுத்துகிற அரசாங்க நிறுவனமாகும். இந்த ஆணைக்குழு 1949ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் திகதி அமைக்கப்பட்டது. இது கல்வி அமைச்சின் கீழ் வருகிறது. கௌரவ கல்வி அமைச்சர் இதற்கு தலைமை தாங்குகிறார். கல்வி அமைச்சின் செயலாளர் இந்த ஆணைக்குழுவின் உப தலைவராக இருக்கிறார். அதேநேரத்தில் செயலாளர் நாயகம் இந்த ஆணைக்குழுவின் நிறைவேற்று முதல்வராக இருக்கிறார். யுனெஸ்கோவின் துறைகளில் திறமைபெற்ற தேசிய நிறுவனங்களும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் பிரதிநிதிகளும் உட்பட பொதுச்சபையில் 35 உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். ஆணைக்குழு ஊக்குவிக்கும் பிரதான துறைகள் கல்வி, விஞ்ஞானம், கலாசாரம் மற்றும் தொடர்பாடல் என்பவையாகும்.